மிளிரும் உலகம் LED உடன்..#3 இயற்கையுடன் மனிதனின் போட்டி…

ஒரு குறுகிய காலத்தில் மனிதனின் தேவை அதிகரிக்க அதன் நிறத்தை மாற்ற அதாவது நிறத்தில் சூரியனுக்கு போட்டி போட எண்ணினான்.
Inline image 1
ஆனாலும் திறன் குறைவாக இருக்க வேண்டும். ஆகவே  அவனிடத்தில் ஏற்கனவே இருந்த tungsten இலைகளை பயன்படுத்தவே எண்ணினான்.ஆனால் இம்முறை ஒரு இலை அல்ல இரண்டு இலைகள் இருபுறமும் வைத்தான் நீண்ட உருண்ட கண்ணாடி குழாய் அமைப்பில் அதனை வடிவம் செய்தான்,அதில் UV கதிர்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பாதரச ஆவி பூச்சை பயன்படுத்தினான் .  அதனுள் வாயுக்களை அடைத்தான் அந்த வாயுக்கள் மந்த வாயுக்களான ஆர்கன் அல்லது கிரிப்டான் பயன்பட்டது,
Inline image 2
இரண்டையும் சேர்த்து இப்பொழுது எரியூடினான் ஆனால் அது எரியவில்லை.காரணம் மின்னழுத்தம் அதிகம் தேவைப்பட்டது.ஆனால் அந்த வாயுக்களை தூண்ட  மிக அதிக அளவு மின்சாரமான கிலோவோல்ட் அலகில் தேவைப்பட்டது,அதாவது பல நூறு மடங்கு மின்னழுத்தம் தேவைப்பட்டது ஆகவே,அந்த வாயுக்களை முடிக்கிவிட(ஆரம்பம் மட்டும் தான்) தேவையான மின்சாரத்தை எதனில் இருந்து பெறுவது என்பது கேள்விக்குறியானது ,எனவே அவன் உண்டாக்கியது தான் தடுப்பான் (choke) அதாவது ஒரு நிலையான மின்னழுத்ததை கொண்டு இதனை எரியூட்ட முடியவில்லை அதனால் அவன் குறைந்த அளவு மின்சாரத்திலிருந்து அதிக அளவு மின்சாரமாக மாற்ற இந்த தடுப்பானை பயன்படுத்தினான்.
 Inline image 3
தடுப்பான் என்பது ஒரு மின் தூண்டும்  கலன், அது இரும்பாலான அடுக்கு மீது செப்பு கம்பியால் சுற்றப்பட்டுள்ளது..அதில் சிறிதளவு மின்சாரம் சேமிக்கப்படும்..இதை பயன்படுத்தி விளக்கில் உள்ள வாயுக்களை முடுக்க பயன்பட்டது..
இது சுமாராக நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சார அளவான 230 வோல்ட் தான்,அதில் இந்த விளக்கில் உள்ள வாயுக்களை தூண்டி மின்னூட்டம் பாய வைக்க வேண்டும் அதற்க்கு 11 கிலோவோல்ட் அதாவது 11000 வோல்ட் தேவைப்பட்டது அதற்க்கு தான் இந்த தடுப்பான் தேவைப்பட்டது.தடுப்பானின் பணிக்கு முன்பு ஸ்டார்ட்டரின் வேலை மிகவும் அவசியமாக இருந்தது.
அதாவது,
Inline image 4
விளக்கை முடுக்கும்போது (ON)  பொழுது நேரடியாக  மின்சாரமானது விளக்கிற்கு செல்ல அனுமதி இல்லை,அதாவது இந்த ஸ்டார்ட்டர் விளக்குக்கு பக்கவாட்டில் இணைக்கப்பட்டு இருக்கும்,இது அதில் உள்ள வாயுக்களை கிளர்ச்சியடைந்த  பின்னர் மின்சாரத்தை அனுமதிக்கும்,
மேலும்  இந்த 230 வோல்டை தடுப்பானினூடே செலுத்தி தேவையான மின்சாரமனான 11000 வோல்ட் கிடைத்தது அதே அளவு மின்சாரம்  தொடர்ந்து தேவைப்படவில்லை,பிறகு  அது இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.அதாவது 230 வோல்ட் தான் அதன் பயன்பாட்டு அளவு..
மேலும் விஞ்ஞானம் வளர்ந்து இந்த ஸ்டார்ட்டர்-ன் பயன்பாட்டை நிறுத்த மின்னணுவியல் தடுப்பான் தயார் செய்யபட்டு பயன்படுத்த ஆரம்பித்தனர்,
Inline image 5
இந்த செயல்பாட்டின் காரணமாக வைத்து அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் தயார் செய்யப்பட்டது……

பல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும்.

1.நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும். ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன. அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும்.

2.மனிதன் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவருடைய உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம், மனிதன் உட்காரும்போது, அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்ப்படும் அழுத்தமாகும்.

3.ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீராகாரத்தையும் உட்கொள்கிறான்.

4.கண்களின் தசையானது ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்க்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

5.ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தை கொடுக்கிறது.

6.ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

7. மனிதனின், ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும்.

8. மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.
மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சராசரி பெண்ணின் உயரம், ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்.

9. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும். ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது.

10.மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தனாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது. ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களை சேமித்து வைக்க முடியும்.

11.மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் மூடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள கடினமான பொருளாகும். 

12.கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும். மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்.

நன்றி :பாலா(பண்புடன்) 

வியந்து தான் போவீர்கள்

வியந்து தான் போவீர்கள்

# சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.

# ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

# ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

# மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

# காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

# ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால் கொடுக்கும்.

# உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.

# டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.

# வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும், குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.

# ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

# பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.

# மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.

# பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப் பாலை மட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4 பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

# கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

# கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ

# ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

# சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்.

# ஹூக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கோல்கட்டா நகரம்.

# நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

# ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

# நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.

இதயம் சில உண்மைகள்! ! ! !

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30)சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி -நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.
5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)
6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
9. நாம் இதயத்தின் மேல் கை வை என்றால் உடனடியாக நாம் நமது கையைநெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரலுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறதுஎன்பதுநமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம்உருவாகிறது.

கவிதை என்று நினைத்தது…

அறிவியலும் விஞ்ஞானமும் சொன்னது.

நிலா ஒன்று தான் என்று,

ஆனால்,அவற்றை எல்லாம் நம்பாமல் நான் இரண்டு என்றேன்

உன் கண்களை பார்த்த பிறகு………..

-அரும்பு.

“தெரிந்து கொள்வோம் வாங்க”

தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி!

கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழேகுறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்.

பறவை காலையில் சப்திக்கும் நேரம் *** கரிச்சான் குருவி 3.௦௦ மணி செம்போத்து 3.30 மணி குயில் 4.00 மணி… சேவல் 4.30 மணி காகம் 5.00 மணி மீன் கொத்தி 6.00 மணி

courtesy: facebook.

970474_557156027653218_331435124_n