50 வருடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குழு

1962 ஆம் ஆண்டு பாடசாலை ரக்பி விளையாட்டு நிகழ்ச்சியின்போது புகைப்படமெடுத்துக் கொண்ட 16 பேரும் 50 வருடங்கள் கழித்து Image சந்தித்து புகைப்படமெடுத்துக் கொண்ட அபூர்வ சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஹம்ஷியரிலுள்ள போர்ட்ஸ்மவுத் கிரம்மர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு 50 வருடங்களின் பின் மீண்டும்  வயோதிப வயதில் ஒன்றாக புகைப்படமெடுத்து சாதனை படைத்துள்ளனர். 

இவ்வாறு 16 மாணவர்கள் 50 வருட காலமாக உயிருடன் இருந்து மீளவும் சந்தித்து புகைப்படமெடுத்துக் கொள்ளும் நிகழ்வு 250,000 க்கு ஒன்றென்ற வீதத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வாகும்.

குட்டி கதை

குட்டிக்கதை:

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை.

அத்துடன் கோபம் வேறு பொங் கியது…
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது.

ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென் றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

நன்றி:முகப்புத்தகம்

பழங்கால அளவைகள்..

“பழந்தமிழர் அளவைகள்”

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.

ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

 
நன்றி:முகப்புத்தகம் படம்

முக்கிய தகவல் :

தமிழ்நாட்டின் மாநில:

பறவை : பஞ்சவர்ண புறா

 
விலங்கு : வரையாடு

 
மலர் : செங்காந்தள்

விளையாட்டு : சடுகுடு

அரசின் சின்னம் : திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்
 
நன்றி :முகப்புத்தகம்.படம்

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்தவேட்டையன் ஜெட் கார்

விமானம், ஜெட் விமானம், ராக்கெட் என்று அதிவேகப் பயணங்கள் பல வந்துவிட்டாலும்அதெல்லாம் காற்றுவெளியில் மனிதனின் தரை வாகனங்களில் அதிகபட்ச வேகம் கொண்டது எதுஎன்பது இன்னும் கூட தகராறு பிடித்த தலைப்புதான். இனி இந்தக் கேள்வியை யாரும் கேட்கக் கூடாதுஎன்றபடி கற்பனைக்கு எட்டாத ஒரு அதிவேக ஜெட் காரை வடிவமைத்திருக்கிறது இங்கிலாந்து.மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகத்தில் காற்றைக் கிழிக்கக் கூடிய இந்தக் காரின் பெயர் ரத்தவேட்டையன்.
மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகம் என்பது தற்கொலைக்குத் துணிந்தவர்கள் மட்டுமே ட்ரைபண்ணிப் பார்க்கக் கூடியது. ஒரு கைத்துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட்டை விட அதிகவேகம் இது. பொதுவாக தரையில் ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்குவதுசாத்தியமில்லை. அதிவேகத்தில் பயணிக்கும்போது, வாகனத்தின் எடை வெகுவாகக் குறைந்து,விமானம் போல அது மேலெழும்பத் தயாராகிவிடும். அப்படி அது தரையோடு இருக்கும்பிடிமானத்தை இழக்கும்போது, தன் கட்டுப்பாட்டை இழந்து புரட்டியடித்து விழ வேண்டியதுதான்.

ஆனால், இதெல்லாம் அறிந்தும், தெரிந்தும், ஆராய்ச்சி செய்தும்தான் இந்த ரத்த வேட்டையனைவடிவமைத்திருக்கிறார்கள் பிரிட்டிஷ் பொறியாளர்கள். ஏற்கனவே 6.4 டன் எடையும் 13.4 மீட்டர்நீளமும் கொண்ட இந்த நீண்ட கார், அவ்வளவு சீக்கிரத்தில் தன் எடையை இழக்காது. அப்படியே மிகஅதிக வேகத்தில் சென்றாலும், காற்று இதனை மேலே எழுப்பாமல் தரையை நோக்கி இன்னும்அழுத்தும்படி அதி நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஜெட் கார். ஒரு பெட்ரோல் எஞ்சின்,ஒரு பிரமாண்டமான ஜெட் எஞ்சின், ஒரு ராக்கெட் எஞ்சின் என்று மூன்று எஞ்சின்கள் இதற்கு உண்டு.

வழக்கமான ஜெட் கார்களைப் போலவே இதனையும் ஓட்டி முடித்து நிறுத்துவதற்கு பாராசூட்டும்டிஸ்க் பிரேக்கும் பயன்படுகிறது. இவை அனைத்துமே டபுள் ஸ்ட்ராங் ரகம். ஆனால், இந்தப்பெருமைகள் இப்போதைக்கு வெறும் காகிதத்தில் போடப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே. இன்னும்இதன் அசுர தனம் நிரூபிக்கப்படவில்லை. 1997ம் வருடம் த்ரஸ்ட் எஸ்.எஸ்.சி ஜெட் காரில் ஆன்டிகிரீன் என்பவர் மணிக்கு 1227 கி.மீ வேகத்தில் சென்றதே இன்றுவரை சாதனையாக இருக்கிறது.அதை முறியடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிளட் ஹாண்ட் தன் சாதனைப்பயணத்துக்கு அடுத்த ஆண்டில் தான் தேதி குறித்திருக்கிறது என தெரிகிறது.

 

நன்றி :தினகரன்

இரவின் தழுவல்கள்..

இரவு நேரத்தில் நீ வரும் பொழுது நான் அவளை தேடினேன்..

 

காரணம் உன்னுடன் இருக்கும் பொழுது எதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு..

 

அந்த உருவம்,அழகு,தன்மை என்னை எதோ செய்தது…

 

 

இன்று வரை உன்னை அருகில் காணும் வாய்ப்பு கிட்டவில்லை.

 

என்னுடைய ஆயிரம் கதைகளை கேட்ட நீ இன்று ஏன் உன்னை காணவில்லை என்று தவித்து  போனேன்..

 

 

எங்க ஊட்டு கெழவி  சொன்னது இன்னைக்கு அமாவாசை என்று….