மிளிரும் உலகம் LED உடன்..#1

அன்பு நண்பர்களே வணக்கம்,
 
எந்த ஒரு பாடத்தையும் புதிதாக படித்தால் மட்டும் போதாது அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் அதை சொல்லி கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் மறந்து போகும்.
 
ஆகவே எனக்கு தெரிந்து என்னால் உருவாக்கப்பட்ட நான் தேடி சேகரித்தவற்றை,புதிதாக  படித்தவற்றை மொழி பெயர்த்தும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
 
சில சூழ்நிலைகளில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.எனவே மன்னிச்சு..
 
1.”LED”லைட்:
 
அப்புடின்னா  என்ன? 
 
ஒளி உமிழும் டையோடு(Light Emitting Diode.)
 
விளக்கம்:(செயல்படும் முறை)
ஒரு குறைகடத்தி டயோடு (semiconductor diode)இல் மின்னழுத்தத்தை செலுத்தும் பொழுது அது ஒளிர்கிறது..
 
நம்ம கதைக்கு வருவோம்,
ஆரம்ப காலங்களில்  எல்லாம்  குண்டு விளக்கு,முழு நீள விளக்கு(Tube light )இன்னும் நிறைய விளக்குகள் இருந்தன.அவைகள் போதுமானதாக இல்லை ஆகவே, 
 

 
அவைகளில் சிறிது மாறுதல்கள் செய்ய ஆராய்ச்சியாளர்கள் என்னினர் அவைகள் தான்…..
 
கச்சிதமான ஒளிரும் விளக்கு(CFL -Compact Fluorescent Lamp)

 
 
 
 
மற்ற விளக்குகளுடன் ஒப்பிடும் பொழுது  இதன் அளவும்(size) எடுத்துகொள்ளும் திறனும்(power) மிக குறைவே.
எனினும்,ஆராய்ச்சியாளர்கள் நிறுத்தாமல்  தொடரவே  அவர்களால் LED என்ற படைப்பு கிடைத்தது.
Inline image 1
அவற்றை பற்றி தெளிவாக விளக்க உரை கொடுக்கவே விளைகிறேன்.
உங்களின் ஆதரவு எனக்கு தேவை…
வேலை பளுவின் காரணமாக சிறிது தாமதம் ஏற்படலாம்..
 
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

மிளிரும் உலகம் LED உடன்..#3 இயற்கையுடன் மனிதனின் போட்டி…

ஒரு குறுகிய காலத்தில் மனிதனின் தேவை அதிகரிக்க அதன் நிறத்தை மாற்ற அதாவது நிறத்தில் சூரியனுக்கு போட்டி போட எண்ணினான்.
Inline image 1
ஆனாலும் திறன் குறைவாக இருக்க வேண்டும். ஆகவே  அவனிடத்தில் ஏற்கனவே இருந்த tungsten இலைகளை பயன்படுத்தவே எண்ணினான்.ஆனால் இம்முறை ஒரு இலை அல்ல இரண்டு இலைகள் இருபுறமும் வைத்தான் நீண்ட உருண்ட கண்ணாடி குழாய் அமைப்பில் அதனை வடிவம் செய்தான்,அதில் UV கதிர்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பாதரச ஆவி பூச்சை பயன்படுத்தினான் .  அதனுள் வாயுக்களை அடைத்தான் அந்த வாயுக்கள் மந்த வாயுக்களான ஆர்கன் அல்லது கிரிப்டான் பயன்பட்டது,
Inline image 2
இரண்டையும் சேர்த்து இப்பொழுது எரியூடினான் ஆனால் அது எரியவில்லை.காரணம் மின்னழுத்தம் அதிகம் தேவைப்பட்டது.ஆனால் அந்த வாயுக்களை தூண்ட  மிக அதிக அளவு மின்சாரமான கிலோவோல்ட் அலகில் தேவைப்பட்டது,அதாவது பல நூறு மடங்கு மின்னழுத்தம் தேவைப்பட்டது ஆகவே,அந்த வாயுக்களை முடிக்கிவிட(ஆரம்பம் மட்டும் தான்) தேவையான மின்சாரத்தை எதனில் இருந்து பெறுவது என்பது கேள்விக்குறியானது ,எனவே அவன் உண்டாக்கியது தான் தடுப்பான் (choke) அதாவது ஒரு நிலையான மின்னழுத்ததை கொண்டு இதனை எரியூட்ட முடியவில்லை அதனால் அவன் குறைந்த அளவு மின்சாரத்திலிருந்து அதிக அளவு மின்சாரமாக மாற்ற இந்த தடுப்பானை பயன்படுத்தினான்.
 Inline image 3
தடுப்பான் என்பது ஒரு மின் தூண்டும்  கலன், அது இரும்பாலான அடுக்கு மீது செப்பு கம்பியால் சுற்றப்பட்டுள்ளது..அதில் சிறிதளவு மின்சாரம் சேமிக்கப்படும்..இதை பயன்படுத்தி விளக்கில் உள்ள வாயுக்களை முடுக்க பயன்பட்டது..
இது சுமாராக நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சார அளவான 230 வோல்ட் தான்,அதில் இந்த விளக்கில் உள்ள வாயுக்களை தூண்டி மின்னூட்டம் பாய வைக்க வேண்டும் அதற்க்கு 11 கிலோவோல்ட் அதாவது 11000 வோல்ட் தேவைப்பட்டது அதற்க்கு தான் இந்த தடுப்பான் தேவைப்பட்டது.தடுப்பானின் பணிக்கு முன்பு ஸ்டார்ட்டரின் வேலை மிகவும் அவசியமாக இருந்தது.
அதாவது,
Inline image 4
விளக்கை முடுக்கும்போது (ON)  பொழுது நேரடியாக  மின்சாரமானது விளக்கிற்கு செல்ல அனுமதி இல்லை,அதாவது இந்த ஸ்டார்ட்டர் விளக்குக்கு பக்கவாட்டில் இணைக்கப்பட்டு இருக்கும்,இது அதில் உள்ள வாயுக்களை கிளர்ச்சியடைந்த  பின்னர் மின்சாரத்தை அனுமதிக்கும்,
மேலும்  இந்த 230 வோல்டை தடுப்பானினூடே செலுத்தி தேவையான மின்சாரமனான 11000 வோல்ட் கிடைத்தது அதே அளவு மின்சாரம்  தொடர்ந்து தேவைப்படவில்லை,பிறகு  அது இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.அதாவது 230 வோல்ட் தான் அதன் பயன்பாட்டு அளவு..
மேலும் விஞ்ஞானம் வளர்ந்து இந்த ஸ்டார்ட்டர்-ன் பயன்பாட்டை நிறுத்த மின்னணுவியல் தடுப்பான் தயார் செய்யபட்டு பயன்படுத்த ஆரம்பித்தனர்,
Inline image 5
இந்த செயல்பாட்டின் காரணமாக வைத்து அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் தயார் செய்யப்பட்டது……

மிளிரும் உலகம் LED உடன்..#2 வெளிச்சம் கடந்து வந்த பாதை…

மக்களின் தேவையே புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணம்…..

 
 
LED யில் அடிமட்டம் வரை போக வேண்டும் ஆகவே ஒரு சிறிய முன்னோட்டம்…
முந்தைய காலங்களில் அகல் விளக்கில் மட்டுமே வாழ்ந்து வந்த மக்களுக்கு மின்சார விளக்குகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் இருந்து  வந்த வாழ்க்கை வெளிச்சம் இல்லாமல் இல்லை இருந்தது குறைவாக…அப்போது வாழ்ந்து வந்த மக்கள் தனக்கு தேவையான வெளிச்சத்தை அகல் விளக்குகளே கொடுத்தன….. அப்போது  அவர்கள் பயன்படுத்திய  அகல் விளக்குகள் காற்று வீசும்போது அணைந்துவிடும்,
Inline image 1
ஆகவே அவற்றை பாதுகாப்பாக வைக்க எண்ணி கண்ணாடி குடுவைக்கு நடுவில் வைத்து விளக்கை தயார் செய்தனர்,ஆனால் அது மிக விரைவில் அணைந்து போனது அப்பொழுதுதான் தான் தெரிந்தது நெருப்பு  எரிய காற்று  தேவை என உடனே  ஒரு சிறிய திறப்பு வைத்து பற்ற வைத்தனர்.அது பேச்சு வழக்கில்  முட்டை கிளாஸ் என்றும் அழைக்கப்பட்டது.
Inline image 2
அதன் பிறகு பாதுகாப்பு கருதி அந்த திறப்பை மறைக்கவும் வேண்டும்,மேலும் விளக்கின் வெளிச்சமும் அதிகமாக வேண்டும் அதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த அரிக்கன் விளக்கு…
Inline image 3
இந்த விளக்கு எண்ணையின் பயன்பாட்டு அளவு அதிகம் .ஆகவே அதில் மாற்றம் செய்ய எண்ணினர்…
இதிலும் பூர்த்தியாகாத மனிதன் இருந்து  வந்தான்..இரும்பு செய்யும் கொல்லன் அதன் உருவத்தை மாற்றுவதற்காக அதனை வெப்பபடுத்தினான் அப்பொழுது உண்டான மஞ்சள் நிற தணல் ஒரு பொறி போல் தட்டியது (அதான் ஐடியா வந்துச்சான்)…..
Inline image 4
அந்த தருணத்தில் தான் இந்த சூட்டின் காரணமாக தான் இந்த வெளிச்சம்  உண்டாகிறது (இன்னும் அறிவியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால்(incandescence) சுடர் ஒளி என்பது மின் காந்த கதிர்வீச்சால் உண்டானது இது வெண்சுடர் வெப்ப கதிர்வீச்சு என்று பெயர் ) ஆகவே அதை கண்ணாடி குடுவைக்குள் வைத்து சரி செய்ய முயற்சி செய்யும் பொழுது வெற்றி கண்டான், அதாவது அவன் ஒரு முனையில் சூடு செய்து மற்றொரு முனையை கண்ணாடி குடுவைக்குள் வைத்து பார்த்தாள் ஒளியின் பிம்பம் அருமையாக இருந்தது,இது வெப்பம் அதிகம்  அதனால் கண்ணாடி குடுவையை தாங்கும் அளவிற்கு வடிவமைத்தான்.
வெப்பத்தின் அளவுக்கு ஏற்றார் போல் அதன் நிறத்தை வேறுபடுத்தலாம்..படம்…
Inline image 5
இதே போன்று மற்றொரு இடத்தில வரும் குழப்பிக்கொள்ள  வேண்டாம்..
அதிலும் போதாத அவன் அப்பொழுதுதான் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வெளிச்சம் உண்டாக்க முயன்றான் .அதனால் பழைய வடிவமான விளக்கையே அவன் தனது அஸ்திவாரம் போல பயன்படுத்தினான்,
கண்ணாடிகுடுவையை உண்டாக்கி அதனூடே முதலில் தடிமனான காகிதம் மற்றும் இரும்பு பொருட்கள் கொண்டு உண்டாக்கினான் பிறகு அதை சுருக்கி சுருள் இலை (tungsten)  க்கு மாறினான் அதை தாங்கும் பிடிமானத்தை உருவாக்கி மின்சாரத்தின் உதவியோடு அதனை வெப்பப்படுத்தி தனக்கு வேண்டிய ஒளியை உண்டாக்கினான்..
அது சிறிது நேரம் எரிந்து பிறகு காற்றின் பற்றாக்குறையால் அது வெடித்து சிதறியது..
அதன் பின்னர் முன்னர் கூறியது போல் காற்று அவசியம் என்பதை உணர்ந்த அவன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயற்கை வாயுக்களை பயன்படுத்தினான்.அவை அடர்த்தி மிகுந்த நைட்ரோஜென்  மற்றும் ஆர்கன் கலந்த கலவையை கொண்டு தொடர்ந்தான் அதில் வெற்றியும் பெற்றான்…
சுருள் இலைக்கு மாற காரணம் விளக்கின் ஆயுள் காலத்தை அதிகபடுத்தவும்,மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் ஒவ்வொன்றையும் வடிவமைத்தான்…
விளக்குடன் தாமஸ் எடிசன்,
Inline image 6
மேலும்,
அரிப்பெடுத்தவன் கையும்
ஆன்ட்ராய்ட் பிடிச்சவன் கையும்,
சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க….:)
அதே தான் இங்கேயும்…தேடல் ஆரம்பித்தது…………..
(குறிப்பு: படங்கள் தேவை இல்லை என்றால் தனிமடலில் திட்டவும்,
என்ன நான் சொல்லவந்தேன்  எதுவென்று புரியாது அவ்வளவே :))
அதுவா முக்கியம் இவன் எப்பவுமே இப்புடி தான் மொக்கை போடுவான் சும்மா திட்டலாம் என்றால் வருக வருக. என அன்புடன் வரவேற்கிறேன்… )
தொடரும்…

பல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும்.

1.நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும். ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன. அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும்.

2.மனிதன் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவருடைய உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம், மனிதன் உட்காரும்போது, அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்ப்படும் அழுத்தமாகும்.

3.ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீராகாரத்தையும் உட்கொள்கிறான்.

4.கண்களின் தசையானது ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்க்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

5.ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தை கொடுக்கிறது.

6.ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

7. மனிதனின், ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும்.

8. மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.
மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சராசரி பெண்ணின் உயரம், ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்.

9. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும். ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது.

10.மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தனாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது. ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களை சேமித்து வைக்க முடியும்.

11.மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் மூடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள கடினமான பொருளாகும். 

12.கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும். மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்.

நன்றி :பாலா(பண்புடன்) 

வியந்து தான் போவீர்கள்

வியந்து தான் போவீர்கள்

# சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.

# ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

# ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

# மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

# காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

# ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால் கொடுக்கும்.

# உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.

# டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.

# வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும், குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.

# ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

# பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.

# மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.

# பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப் பாலை மட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4 பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

# கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

# கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ

# ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

# சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்.

# ஹூக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கோல்கட்டா நகரம்.

# நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

# ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

# நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.

இதயம் சில உண்மைகள்! ! ! !

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30)சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி -நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.
5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)
6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
9. நாம் இதயத்தின் மேல் கை வை என்றால் உடனடியாக நாம் நமது கையைநெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரலுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறதுஎன்பதுநமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம்உருவாகிறது.