இரவு நேரத்தில் நீ வரும் பொழுது நான் அவளை தேடினேன்..
காரணம் உன்னுடன் இருக்கும் பொழுது எதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு..
அந்த உருவம்,அழகு,தன்மை என்னை எதோ செய்தது…
இன்று வரை உன்னை அருகில் காணும் வாய்ப்பு கிட்டவில்லை.
என்னுடைய ஆயிரம் கதைகளை கேட்ட நீ இன்று ஏன் உன்னை காணவில்லை என்று தவித்து போனேன்..
எங்க ஊட்டு கெழவி சொன்னது இன்னைக்கு அமாவாசை என்று….